ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் பெரும் கோர விபத்தானது. இதில் 300க்கும் அதிகமானோர் பாலியானார்கள். இந்நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணையை சிபிஐ நடத்தும் என ரயில்வே அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக, விசாரணையைத் தொடங்கியது சி.பி.ஐ. இதில் மொத்தம் 10 பேர் கொண்டு அடங்கிய குழு, விபத்து நடந்த பாஹாநாகா ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், ரயில்வே வாரியத்தின் பரிந்துரையின்படி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், இந்த விபத்து எப்படி நடந்தது என்பதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சைலேஷ் குமாரும் விசாரித்து வருகிறார்
- Advertisement -