ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூர் – ஹௌரா விரைவு ரயில், சரக்கு ரயில் என அடுத்தடுத்து மோதி கோர விபத்தானது. இதில் பல நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள், 1000க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், இந்த ஒடிசா ரயில் விபத்து காரணமாக உயிரிழந்த 275 பேரில், 101 பேர் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட வில்லை என அம்மாநில அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த விபத்தில் பலியான 55 பேரின் உடல்கள் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்தது . எஞ்சிய உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -