பொதுவாக இந்துக்கள் கொண்டாடப்படும் விசேஷங்களில் கடவுள்களை வணங்கும் போது சில பொருட்களை வைத்து பிள்ளையார் பிடித்து வணங்குவோம். அப்படி எந்த பொருட்களை வைத்து பிள்ளையார் பிடிப்பதால் எந்தெந்த பலன்கள் என்பதைக் காணலாம்.
அதன்படி, நாம் மஞ்சளில் பிள்ளையார் பிடித்தால் – சகல சௌபாக்கியமும் கிடைக்கும், குங்குமத்தால் பிள்ளையார் பிடித்தால் – செவ்வாய் தோஷம் அகலும், வெள்ளெருக்கில் பிள்ளையார் பிடித்தால் – பில்லி,சூன்னியம் விலகும், சந்தனத்தால் பிள்ளையார் பிடித்தால் – புத்திர பேறு கிடைக்கும், வெண்ணெய்யில் பிள்ளையார் பிடித்தால் – கடன் தொல்லை நீங்கும், வாழைப்பழத்தில் பிள்ளையார் பிடித்தால் – வம்ச விருத்தி உண்டாகும் என்பது ஐதீகம்
- Advertisement -