வீட்டிற்கு வருபவர்களுக்கு முதலில் ஒரு சொம்பு நிறையத் தண்ணீரைக் கொடுக்கலாம் அல்லது குளிர்ந்த நீர் மோர் கொடுக்கலாம். இவ்வாறு செய்யும் போது அவர்கள் மனமும், வயிறும் குளிர்ந்து நம்மைப் பொறாமை குணத்துடன் பார்க்காமல், நல்ல நட்புறவுடன், நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவார்கள். அது போல வயதில் குறைந்தவர்கள் அல்லது பெரியவர்கள் யாராக இருந்தாலும் பெண்கள் நம் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்குத் தாம்பூலம் கொடுக்க வேண்டும்.
இப்படி தாம்பூலம் கொடுக்க முடியாதவர்கள் ஒரு மஞ்சள் கிழங்கைக் கொடுப்பது குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் தடை இல்லாமல் நடப்பதற்குச் சிறந்த பரிகாரம் . அந்த வகையில் செல்வம் நம் வீட்டில் வற்றாமல் பெருகிக் கொண்டே செல்வதற்கு அப்பெண்களுக்கு மருதாணி இலை அல்லது மருதாணி, மருதாணி பவுடர் போன்றவற்றை வாங்கிக் கொடுத்தால் அற்புதமான பரிகாரமாக இருக்கும்
- Advertisement -