முதலில் சம்மணமிட்டு, நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து, நெஞ்சுப் பகுதியில், கைவிரல்களை உடலில் ஒட்டாமல் வைக்க வேண்டும். இரண்டு கைகளின் கட்டைவிரலும், சுண்டு விரலும் முழுமையாக ஓட்டியிருக்க வேண்டும். மற்ற விரல்களை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு மலர்ச்சியாக விரித்துவைக்க வேண்டும். *20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
இதன்மூலம் கிடைக்கும் பலன்கள் என்னவென்றால், மனமலர்ச்சியையும், முகமலர்ச்சியையும் தரும். மனச் சலனம், வீண் கோபம், பதற்றம் ஆகியன நீங்கும். தேகத்தில் தேஜஸும் ஏற்படும். உடலைக் குளிர்ச்சியாக்கி, மனதில் தேவையான வெம்மையைத் தக்கவைத்து, ஆரோக்கியத்தைச் செம்மையாக்கும். பிள்ளைகளுக்கு ஞாபக சக்தி வளரும், கல்வியில் மேன்மை பெறுவார்கள்.
- Advertisement -