உங்களுக்குக் கடன் தொல்லை அதிகமாக இருக்கிறதா ? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, பெருமாள் செல்வத்தை வாரி வழங்குபவர் என்றால், அவர் அருகில் இருக்கும் சக்கரத்தாழ்வார் கடன் இல்லாத வாழ்வைத் தருபவராக இருக்கின்றார். ஆகவே, நீங்கள் பெருமாள் கோவிலுக்குச் சென்று சனி மற்றும் புதன் கிழமைகளில் சக்கரத்தாழ்வார் சன்னிதியில், துளசி மாலை சாற்றி, 12 முறை வலம் வர வேண்டும்.
இப்படி வாரத்தில் இந்த புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த துளசி மாலை சாற்றி ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும், கடன் தீர்வதற்கு மனமுருகப் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். இப்படித் தொடர்ந்து 12 வாரங்கள் செய்தாலே கடன் எல்லாம் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை.
- Advertisement -