இன்று (மே 31) உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினம் முன்னிட்டு, பல நிகழ்ச்சிகள், விழிப்புணர்வுகள், உள்ளிட்ட பல ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனால், பல மக்கள் திருந்தவர்கள் என நம்பிக்கை அடிப்படையில் இந்த உலக புகையிலை எதிர்ப்பு தினம் நடைபெறுகிறது.
அந்த வகையில், இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிய சச்சின் டெண்டுல்கர் அவர்கள், ”நான் இந்தியாவிற்காக விளையாடும்போது நிறைய புகையிலை தொடர்பான விளம்பர வாய்ப்புகள் வந்தன. ஆனால், நான் புகையிலை பிடிக்க மாட்டேன் மற்றும் புகையிலை தொடர்பாக எந்த விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன் என என் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறக்கூடாது என்பதற்காக நான் எதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை” என இந்த உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் தனது மனம் திறந்து சச்சின் கூறினார்