ராகுல் காந்தி அமெரிக்காவில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய நேற்று (மே 30) அமெரிக்கா சென்றார். இந்நிலையில், இன்று (மே 31) புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாட உள்ளார்.
இந்நிலையில், அங்கு நடைபெற்ற கூட்டத்தில், ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார். அதில் “தமிழர்களுக்கு ‘தமிழ்’ என்பது வெறும் மொழி மட்டுமல்ல, அது அவர்களின் வரலாறு, கலாச்சாரம், வாழ்க்கை முறை. அப்படிப்பட்ட தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என உறுதி எடுத்துள்ளார்.
ஏனென்றால், தமிழ்மொழியை அச்சுறுத்துவது, இந்திய நாட்டின் அடிப்படை கட்டமைப்பையே அச்சுறுத்தும் செயலாகும் என்பதைத் தெரிவித்தார்.
- Advertisement -