நம் வீட்டுப் பெண்கள் பொதுவாக இன்று இட்லி மாவு அரைத்து மறுநாள் கொஞ்சம் புளிக்க வைத்த பின் இட்லி, தோசை போன்ற உணவுகள் சமைத்துச் சாப்பிடுவர். அப்படி இந்த புளிக்க வைத்த உணவுகள் சாப்பிடுவது நல்லதா ? நாம் சாப்பிடும் இட்லி, தயிர் போன்ற புளிக்க வைத்த உணவுகளில் உள்ள ப்ரோபயாடிக்ஸ் நம் குடல் நலனை மேம்படுத்தி செரிமானத் திறனை அதிகரிக்கும்.
மேலும், இதில் வைட்டமின் சி, ஜிங்க், இரும்புச்சத்து போன்றவையும் உள்ளதால் இது உடலுக்கு நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. குறிப்பாக உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கவும் புளிக்க வைத்த உணவுகள் உதவுகின்றன என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- Advertisement -