சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் வரும் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர சில விசேஷ நாட்கள் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் இக்கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று (மே 30) பிரதிஷ்டை தின சிறப்புப் பூஜைக்காகச் சபரிமலை கோயில் நேற்று (மே 29) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த பிரதிஷ்டை தின சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் முடித்து இன்று இரவு 10 மணியளவில் மீண்டும் நடை அடைக்கப்படும்.
இதற்குப் பின்னர், வருகின்றன ஆனி மாத பூஜைக்காகச் சபரிமலை கோயில் ஜூன் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இதையடுத்து, ஜூன் 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் சிறப்புப் பூஜைகள் நடைபெறும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.