- Advertisement -
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 1 அன்று பள்ளி திறக்கப்படுவதற்குப் பதில் ஜூன் 7 ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் முடிவின்படி அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார்.
அதைப்போல், தற்போது புதுச்சேரியிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பலதரப்பினர் பள்ளி தேதியை மாற்றக் கோரிக்கை வைத்ததை ஒட்டி, வரும் ஜூன் 7ம் தேதி அன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
- Advertisement -