முன்னாள் மத்திய நிதியமைச்சர் மற்றும் காங்கிரஸ் எம்.பிமான ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் அவர், அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் செய்யப் போகும் யுக்தி குறித்தெல்லாம் என்னால் இப்போது சொல்ல முடியாது. ஆனால் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓரணியில் சேர்ந்தால் 400 முதல் 450 இடங்களில் தொகுதிகளில் பொதுவான பிரதமர் வேட்பாளரை முன் நிறுத்தி களம் காணலாம்” என்றார்
மேலும், அவர் ” இப்படி எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்துவதே எனது ஆசை அதுவே லட்சியம். வரும் ஜூன் 12-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்க இருக்கிறது. மேற்கூறியதை செயல்படுத்துவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. அது நடக்கும். ஆனால் அதற்குச் சிறிது காலம் ஆகும்” எனப் பேட்டியளித்துள்ளார்.