டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவைக் கொடுப்பதாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தினர். அதனால், டெல்லி உச்சநீதிமன்றம் காவல்துறைக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருந்தது. ஆனாலும், பாஜக எம்.பி மற்றும் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை.
இந்நிலையில், நேற்று (மே 28) ஜந்தர் மந்தரில் அமைத்திருந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற மல்யுத்த வீரர்களைக் காவலர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். மேலும், இனி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்றும், இந்த பகுதி தவிர்த்து வேறு பகுதியில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கப்படும் என டில்லி காவல்துறை சற்றுமுன் தெரிவித்துள்ளது.
- Advertisement -