டெல்லியில் உள்ள ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமியைக் கத்தியால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும், இந்த கொலையில் 20 முறை கத்தியால் குத்தியும், கல்லைத் தூக்கிப் போட்டுக் கொன்று தப்பிய ஓடிய காட்சி அங்குள்ள சிசிடிவி-யில் பதிவானது. இதை அறிந்த டெல்லி காவல்துறை, இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், இது காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராற்றில் நடந்த கொலை எனத் தகவல் வந்தது
தற்போது, இந்த கொலையாளியைப் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த 6 வயது சிறுமி கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில், தேடப்பட்ட சாஹில் என்ற இளைஞரை உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் காவல்துறை தெரிவித்துள்ளது.
- Advertisement -