Friday, April 26, 2024 10:59 pm

மும்பை வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நடப்பு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று (மே 24) சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், லக்னோ அணியை 81 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று குவாலிஃபியர் 2 சுற்றுக்கு முன்னேறியது. அங்கு நாளை (மே 26) அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது மும்பை அணி.
இந்நிலையில், வெற்றி பெற்ற மும்பை வீரர்களுக்கு, சச்சின் டெண்டுல்கர் அவர்கள், ”லக்னோவுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மும்பைக்கு என்ன ஒரு அற்புதமான வெற்றி. இதில் சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன் பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது. அதைப்போல், வதேரா ஆட்டத்தை நிறைவு செய்த விதமும் அருமை. மத்வால் மும்பை அணி மீதான அன்புடன் நன்றாகப் பந்துவீசினார் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்