சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் 76-வது உலக சுகாதார கூட்டம் கடந்த மே 20-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த மே 22ஆம் தேதியில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் ஆதானோம் கேப்ரியேசஸ் அவர்கள் பேசினார். அதில் கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்துள்ளது. அதனால், கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தம் இல்லை என்றார்.
மேலும், அவர் ”இனி இந்த கொரோனாவை விடப் பல மடங்கு கொடிய தொற்றை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும்” என்றார். அதன்படி, வரும் பெருந்தொற்றானது மிகவும் மோசமான அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.
- Advertisement -