Friday, April 26, 2024 3:11 pm

ஐபிஎல் 2023 : ப்ளே ஆஃப் சுற்றை உறுதிசெய்யுமா சென்னை? டெல்லியுடன் இன்று பலப்பரீட்சை

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது ப்ளே-ஆப் சுற்றுக்கான போட்டி சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், இன்று (மே 20) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சென்னை அணி இதுவரை 13 போட்டிகள் விளையாடி 15 புள்ளியுடன், புள்ளி பட்டியலில் 2வது இடத்தை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில், இந்த மும்பை, பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட அணிகளும் பிளே-ஆப் வாய்ப்பில் நீடிப்பதால், சென்னை அணி இப்போட்டியில் வெற்றி பெறவேண்டியது கட்டாயத்தில் உள்ளது. மேலும், இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் , 2-வது இடத்தை உறுதிசெய்யவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தோல்வி அடைந்தால் மற்ற அணிகளின் போட்டி முடிவுகளைப் பொறுத்தே சென்னை அணியின் தலைவிதி தீர்மானிக்கப்படும் என்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்