- Advertisement -
இந்தியாவில் ஐபிஎல் தொடர் ஆரம்பித்து தற்போது வரை பல அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொரு சீசனிலும் பல சாதனை செய்து வருகின்றனர். அதில் சில சாதனைகளும் இடம்பெறலாம் இல்லை மோசமான சாதனைகளும் இடம்பெறலாம். அப்படி இந்த நடப்பு ஐபிஎல் சீசனில் பல வீரர்கள் தங்களது சாதனையை ஐபிஎல் வரலாற்றில் பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், ராஜஸ்தான் அணியை சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், ”தேசிய அணியில் இல்லாமல் ஒரே ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை (625) குவித்த வீரர் என்ற சாதனையை தற்போது படைத்துள்ளார். இதற்குமுன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷான் மார்ஷ் என்பவர் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 616 ரன்களை குவித்ததே ஒரு சீசனில் அதிக ரன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -