- Advertisement -
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறும் பிளே ஆஃப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு தொடங்கிய நிலையில், இணைய தளம் சரியாக வேலை செய்யவில்லை என சில ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், பலர் பணம் செலுத்தும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப தாமதம் காரணமாக தேவையான டிக்கெட்டை புக் செய்ய முடியாமல் போனதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், இங்கு மொத்தம் எவ்வளவு டிக்கெட் இருக்கிறது போன்ற எந்த எண்ணிக்கை குறித்த தகவலும் தங்களுக்கு தெரியவில்லை எனவும் ரசிகர்கள் குமுறல்.
- Advertisement -