- Advertisement -
இந்தியாவில் தற்போது ஐபிஎல் லீக் போட்டி பல இடங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பிளே அப் சுற்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மே 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறும் என நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று (மே 18) பகல் 12 மணி முதல் ஆன்லைனில் மட்டுமே நடப்பதாகவும் அறிவித்தது.
தற்போது, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இரண்டு பிளே ஆஃப் போட்டிக்கான, டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்தது என சற்றுமுன் அறிவிப்பு வெளியாகியது. இதில் குறைந்தபட்சம் ரூ .2000, பின்னர் ரூ. 2500, ரூ. 3000, ரூ. 5000 என நான்கு விலையில் டிக்கெட் விற்பனையானது என தெரிவித்தனர்.
- Advertisement -