தமிழில் வெளிவந்த தில்லு முல்லு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இஷா தல்வார். அதன்பிறகு சமீபத்தில் வெளிவந்த ரன் பேபி ரன் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இவர் தற்போது ”சாஸ், பஹு அவுர் பிளமிங்கோ” என்ற இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் வரும் சண்டை கட்சியை கடற்கரை உப்பளத்தில் படமாக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த சண்டை காட்சியில் கலந்து கொண்ட இஷா தல்வார், அங்கு வைக்கப்பட்ட டம்மி குண்டு வெடித்ததில் இஷா தல்வருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” அந்த சண்டை காட்சி படப்பிடிப்பு நள்ளிரவு என்பதால், அங்கு வெடிபொருள் எந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என எனக்கு தெரியவில்லை என்றும், அப்போது வெடித்த டம்மி வெடியால் எனது கண் பாதிக்கப்பட்டது. என்னால் கண்ணை திறக்க முடியாததால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றேன்.
அவர்கள் நான் மூன்று நாள் கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என தெரிவித்ததை என ட்வீட் மூலம் கூறியுள்ளார்.