- Advertisement -
இறைவனால் படைக்கப்பட்ட 4 வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான் அதனாலேயே விடியற்காலை நேரம் உஷத் காலம் என அழைக்கப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாயும்போது, அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விசேசமாக கருதப்படுகிறது.
இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக உள்ளது. அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படைந்து, ஆரோக்கியமாக இருக்கும் என்பதால் பிரம்ம முகூர்த்த காலமான காலை 4:30 மணி முதல் 6 மணிக்குள் எழுந்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன
- Advertisement -