ஜப்பானின் தலைநகரான டோக்கியோவை தலைமையிடமாக கொண்டு செய்யப்படும் ஐஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று ஹகுடோ-ஆர் லேண்டர் என்ற விண்கலத்தை உருவாக்கிருந்தது. அப்படிப்பட்ட இந்த லேண்டர் விண்கலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஷித் ரோவருடன் சேர்ந்து நிலவில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளவே இந்த விண்கலம் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், நிலவுக்கு கடந்த 4 1/2 மாதமாக பயணித்து நேற்று நிலவில் தரையிறங்க முயன்றது. ஆனால், அப்படி தரையிறங்க முற்பட்ட போது திடீரென சுமார் 6 மணி நேரமாக இந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆகவே, அந்த நாட்டு விஞ்ஞானிகள் லேண்டர் விண்கலம் நிலவில் விழுந்து நொறுக்கியுள்ளதாக தகவல் தெரிவித்தன.
மேலும், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே தனியாரின் ஆளில்லா விண்கலத்தை இதுவரை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது