உலகம் முழுவதும் தற்போது டாலரின் அதிகரிப்பால் பல நாடுகள் அனைத்தும் இழக்கிறது. இதில் அதிகமாக இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் டாலரின் ஆதிக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுக்கிறது. இதற்கு தீர்வாக சர்வதேச அளவில் பயன்படுத்த மாற்றும் நாணயம் கொண்டு வர வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தாலும் இது சாத்தியப்படாத ஒன்று.
ஆனால், தற்போது ரஷ்யா – உக்ரைன் இடையே ஏற்பட்டிருக்கும் போரால் ரஷ்யாவின் மீது ஜி7 நாடுகள் மாநாடுகள் மூலம் பல தடை விதிப்பு நடந்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க ரஷ்யா மாற்று வழியாக உள்நாட்டு நாணய பரிமாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ரஷ்யாவிடமிருந்து வாங்கும் பொருட்களுக்கு உள்நாட்டு நாணயத்தையோ அல்லது விருப்பமான வேறு நாணயத்தை செய்யலாம்.
சமீபத்தில் பங்களாதேஷ் ரஷ்யாவிடமிருந்து வாங்கிய பொருட்களுக்கு சீனாவின் நாணயத்தை பயன்படுத்தியது. அதைபோல் தற்போது அர்ஜென்டினாவின் பொருளாதாரம் மோசமான சூழலில் இருப்பதால் அதை கட்டுப்படுத்த இனி சீன இறக்குமதிக்கு டாலரை பயன்படுத்தாமல் யுவான் நாணயத்தை பயன்படுத்த முடிவு எடுத்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.