சென்னையில் நேற்று தமிழக காங்கிரஸின் கமிட்டி தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியின் மகளுக்கு மகள் திருமண வரவேற்பு விழா திருவான்மியூரில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டனர்.
ஆனால், இந்த திருமண வரவேற்பில் இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில கர்நாடக தேர்தல் பணி காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என தகவல் வந்தது.இதனிடையே ஏற்கனவே கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் மணமக்களுக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்த போது அவர்களுக்கு மரியாதைக்காக சால்வை அணிவித்து வரவேற்றார்.
அந்த வகையில், நடிகர் சிவகுமார் அவர்களும் தனது வாழ்த்தை தெரிவித்த போது அவருக்கு சால்வையை கே.எஸ்.அழகிரி அணிவித்த போது அதை வெடுக்கென பிடுங்கிய பொது சிரித்து சமாளித்த அழகிரிக்கே அந்த சால்வையை அணிவித்து மகிழ்ந்தார்.