தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, காவல் துறையை நவீனப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மற்றும் சட்டம் ஒழுங்கை நல்ல முறையில் பேணுவதற்கான தொடர் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் பாதுகாப்பை தீவிரப்படுத்த இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.