அந்தமான் கடற்பகுதியில் டிசம்பர் 5-ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று பிராந்திய வானிலை மையம் (ஆர்எம்சி) புதன்கிழமை தெரிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கிழக்கு காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், டிசம்பர் 4ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 5-ம் தேதிக்குள் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது