திருவள்ளுவர் சாலை முதல் அம்மா உணவகம் வரை சுரேஷ் நகர் சந்திப்பு (வெளியேறும் திசை) வரை நெடுஞ்சாலைத் துறையின் மழைநீர் வடிகால் பணிகளுக்கு வசதியாக வளசரவாக்கம் காவல் எல்லையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை நகரப் போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.
திங்கள்கிழமை (செப்டம்பர் 26) முதல் ஜனவரி 15, 2023 வரை போக்குவரத்து மாற்றம் அமுல்படுத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆற்காடு ரோடு மெகாமார்ட் சந்திப்பில் இருந்து அரசமரம் சந்திப்புக்கு வரும் வாகனங்களுக்கு மாற்றுப்பாதை இல்லை.
திருவள்ளுவர் சாலையில் மெகாமார்ட் சந்திப்பில் இருந்து சுரேஷ் நகர் சந்திப்பு வரை போக்குவரத்து ஒருவழியாக மாற்றப்படும்.
ராமாபுரம் அரசமரம் சந்திப்பில் இருந்து ஆற்காடு சாலைக்கு செல்லும் வாகனங்கள் சுரேஷ் நகர் சந்திப்பில் கட்டாயம் இடதுபுறமாக வந்து, சௌத்ரி நகர் – ஆற்காடு சாலை வழியாக போரூர் அல்லது வடபழனிக்கு செல்ல வேண்டும்.