தமிழகத்தில் 30,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சேர்க்கையில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் இன்ஜினியரிங் சீட் தேடும் மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் இன்று தொடங்கியது.
முதல் கட்ட கவுன்சிலிங்கின் போது 11,595 பேருக்கு பொறியியல் இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 184.5 முதல் 163 வரையிலான கட்-ஆஃப் மதிப்பெண்கள் (ரேங்க் 14,524 முதல் 45,577 வரை) பெற்ற மாணவர்களுக்கு இரண்டாவது அமர்வு நடத்தப்படும். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கவுன்சிலிங் தொடங்கியது.
“இந்த மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு செப்டம்பர் 28 அன்று செய்யப்படும்” என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் (DOTE) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கான இறுதி தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் அக்டோபர் 13ஆம் தேதி வெளியிடப்படும். 162.9 முதல் 130.2 வரையிலான கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் பங்கேற்கும் மூன்றாவது சுற்று கவுன்சிலிங் அதே நாளில் தொடங்கும்.
“இந்த விண்ணப்பதாரர்களுக்கான, இறுதி தற்காலிக ஒதுக்கீடு பட்டியல் அக்டோபர் 29 அன்று வெளியிடப்படும்,” என்று DOTE அதிகாரி கூறினார். தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA-2022) அட்டவணையின்படி, மாணவர்களுக்கான இறுதி மற்றும் நான்காவது சுற்று கவுன்சிலிங், பொதுப்பிரிவில் 130 முதல் 77 வரை கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கி நவம்பர் 11ஆம் தேதி முடிவடையும்.