சென்னை பெட்ரோல் பங்க்குகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தினத்தந்தி செய்தியின்படி, சென்னையில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்க்களில் இன்றும் “டீசல் இல்லை” என்ற பலகை காணப்பட்டது.
“கச்சா எண்ணெய் வரத்து இல்லாததாலும், வினியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் திடீரென டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமானது தான். இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்” என எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதன்படி சென்னையில் 108வது நாளாக கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன