சுபகிருது ஆண்டின் ஆடி மாதம் சில ராசிகளுக்கு மிகவும் சிறப்பான மாதமாக இருக்கப்போகிறது. இறைவழிபாட்டிற்கு உரிய மாதமாக கருதப்படுவதால், சுப காரியங்களை ஆடி மாதத்தில் தவிர்ப்பார்கள். எந்த ராசிகளுக்கு எதுபோன்ற பலன்களைக் கொடுக்கும்? என்பதை பற்றி பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு இந்த ஆடி மாதம் அமோகமான பலன்கள் கிடைக்கும். முன்கூட்டியே திட்டமிட்டு செலவு செய்வது நல்லது.
வெளியூர் பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கிரக நிலைகள் மாத இறுதியில் சிரமத்தை கொடுக்கும் என்பதால் புதிய முயற்சிகளை கைவிடுவது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் முழுவதும் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும் வகையில், தடைகள் யாவும் விலகி நன்மைகள் நடக்கும்.
அடுத்து தொலைதூர பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால், நிதானத்தை கைவிட வேண்டாம்.
தனுசு
தனுசு ராசியினர்களுக்கு ஆடி மாதத்தில் தடைகள் விலகி குடும்பத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.எந்த சூழலிலும் நேர்மையை கைவிட வேண்டாம்.
சிம்மம்
சிம்ம ராசியினர்களுக்கு ஆடி மாதம் முழுவதுமாக பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரித்து பணி சுமையும் கூடினாலும் மதிப்பும் கெளரவமும் உயரும்.
அடுத்து, தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறும்.