- Advertisement -
சென்னை மற்றும் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம். கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நீலகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
அக்டோபர் 29 ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கும் நிலையில், இந்த வார தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை தீவிரமடைந்தது.
- Advertisement -