ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருகிறது
ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் காட்சிகள் இங்குப் படமாக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில், கியாரா அத்வானி , அஞ்சலி , எஸ்.ஜே.சூர்யா , ஜெயராம் , சுனில் , ஸ்ரீகாந்த் , சமுத்திரக்கனி , நாசர் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘கேம் சேஞ்சர்’. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது.
முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது மைசூரியில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் ராம்சரண் மற்றும் எஸ்.ஜே .சூர்யா ஆகிய இருவரின் காட்சிகளும் மைசூரியில் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஷங்கர் தயாரிக்கிறார். மேலும், இந்தப் படம் 2024 ஆம் ஆண்டு திரைக்கு வரவுள்ளது.