Monday, April 29, 2024 5:48 am

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் திட்டம் பலிக்குமா வெல்லப் போவது யார் சூடு பிடிக்கும் எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

“எதிர்நீச்சல்” சிறந்த தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான TRP தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. குணசேகரன் வீட்டை விட்டு மறைந்த பிறகு, கதை ஒரு புதிய திருப்பத்திற்கு தயாராக உள்ளது, மேலும் அதைப் பற்றி மேலும் அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். தினசரி சோப்பில் மதுமிதா எச், கனிஹா, பிரியதர்ஷினி நீலகண்டன், ஜி. மாரிமுத்து மற்றும் ஹரிப்ரியா இசை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் மீதான வழக்கை மறுபரிசீலனை செய்ய ஜனனி, சக்தி இருவரும் முயற்சி செய்கின்றனர். இந்த விவகாரத்தில் சாருலதாவும் உள்ளே நுழைகிறாள். குணசேகரனுக்கு எதிராக வாதாடுவதற்கு முடிவு செய்து, அதற்கான முயற்சிகளில் இறங்குகிறாள். அதன்படி விசாரணை நடத்தி ஜீவானந்தம் மீதான புகார் மற்றும் அப்பத்தா கொலையை மறுபரிசீலனை செய்ய சொல்லி மனு கொடுக்கின்றனர்.இந்த விஷயம் குணசேகரன் காதுக்கு போகவும் அவன் கடுமையாக அதிர்ச்சி அடைகிறான். இந்த விஷயத்தை இப்படியே விடக்கூடாது என முடிவு செய்கிறான். அதன்படி வீட்டில் வந்து குணசேகரன், ஞானம், கதிர் மூவரும் வெயிட் பண்ணுகின்றனர். இதனிடையில் கோர்ட்டில் இருந்து சக்தி, ஜனனி இருவரும் வீட்டுக்கு கிளம்பி வருகின்றனர்.

அவர்கள் வந்ததும் ஞானம் நிற்க வைத்து என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும். சம்பவ இடத்துல இருந்த நாங்க சொல்றதை கேட்காம, அந்த ஜீவானந்தம் அவனுக்கு ஆதரவா பேசிட்டு இருக்கீங்க. ஒழுங்க மரியாதையாய் கேஸை வாபஸ் பண்ணுங்க என சொல்கிறான். அதற்கு ஜனனி நீங்க சொல்றதுல எனக்கு நம்பிக்கை கிடையாது.

அப்பத்தா விஷயத்துல வேற ஏதோ பெரிசா நடந்து இருக்கு. அந்த உண்மையை கண்டுபிடிக்கும் வரை விட மாட்டேன். இதுக்கு பின்னாடி யார் இருக்கா? இந்த விஷயத்துல சம்பந்தப்பட்டவன் யாருன்னு கண்டுபிடிக்காம விட மாட்டேன் என சொல்கிறான். அந்த சமயத்தில் ஈஸ்வரி விறுவிறுவென வந்து நந்தினி, ரேணுகா, ஜனனியிடம் வேலைக்கு போவதாக சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.ஜனனி, சக்தி இருவரும் அவளுடன் சேர்ந்து கிளம்பி செல்கின்றனர். அதனை தொடர்ந்து காலேஜ் போய் மாணவர்கள் மத்தியில் தனது முதல் கிளாஸை ஆரம்பிக்கிறாள். இதனிடையில் குணசேகரன், ஞானம், கதிருடன் அந்த காலேஜுக்கு வந்து இறங்குகிறான். ஈஸ்வரி கிளாஸ் நடக்கும் இடத்திற்கு சென்று ரகளை செய்ய ஆரம்பிக்கிறான். இதனால் காலேஜ் நிர்வாகம் ஈஸ்வரிக்கு வேலை கொடுப்பதில் இருந்து பின் வாங்குகின்றனர். ஈஸ்வரியும் இதனால் காலேஜை விட்டு கிளம்பிவிடுகிறாள்.

இந்நிலையில் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோவில் குணசேகரனிடம் ஜனனி ஆவேசமாக வந்து, மிஸ்டர் குணசேகரன் நீங்க செஞ்ச காரியத்தால இந்த வீட்லயயே முடங்கி போய்ருவோம் நினைக்காதீங்க. இனிமே தான் இன்னும் வேகமா செயல்படுவோம் என்கிறாள். அதனை தொடர்ந்து சங்கத்தில் இருந்து சிலர் வந்து சங்க எலக்சனில் எஸ்கேஆர் மனைவி சாருபாலா நிற்க போவதாக சொல்கின்றனர்.மறுபுறம் கதிர் குணசேகரனிடம், தேவையில்லாமல் அவங்களை ஏத்தி விடுறீங்களோ என்று தோணுது என்று சொல்ல, குணசேகரன் பொம்பிளைகளை நிற்க வைச்சு என்ன விதமாக ஆடுறாளுகள் என்று காட்டிட வேண்டியது தான் என்கின்றார்.

தொடர்ந்து ஈஸ்வரி வந்ததும் கிளம்புவமா, நாம தான் எலெக்ஷன்ல நிற்கப்போறோம் என்று ஒரு அறிவிப்பு விட்டிட்டு வந்திட வேண்டியது தான் என்று சொல்ல ஈஸ்வரி ஏதோ சொல்கின்றார்.”சிரகடிக்க ஆசை” சமீபத்திய TRP தரவரிசையிலும் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. முத்துக்குமார் மற்றும் மீனா முத்துக்குமாரின் புதிய தொடக்கத்தை தொடர்ந்து நிகழ்ச்சி தொடர்கிறது. முத்து (வெற்றி வசந்த்) என்ற குடிகாரனைச் சுற்றி கதை சுழல்கிறது, அவர் அடிக்கடி குடித்துவிட்டு வீடு திரும்புகிறார் மற்றும் சண்டைகளில் ஈடுபடுகிறார், தனது கடந்தகால பிரச்சனையால் கோபமடைந்த தாயுடன் கூட வாக்குவாதம் செய்கிறார். அவனிடம் கொஞ்சம் அன்பும் பாசமும் காட்டுபவர்கள் அவனை வளர்த்த அப்பாவும் பாட்டியும்தான். மறுபுறம், மீனா (கோமதி பிரியா) ஒரு குடும்பம் சார்ந்த பெண் தன் குடும்பத்துடன் ஒரு பிளாட்டில் வசிக்கிறாள். மீனாவைப் பின்தொடர்ந்து வரும் கடன் சுறா சுதாகருடன் அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். முத்து மற்றும் மீனாவின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை மீதி கதை ஆராய்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்