பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் அரசு நிறைவேற்றிய 10 மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது குறித்து, பஞ்சாப் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பஞ்சாப் ஆளுநரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
“நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். இந்த விவகாரம் மிகவும் ஆபத்தானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைவேற்றிய மசோதாக்களை எவ்வாறு கிடப்பில் போட முடியும்? இதே நிலை தொடர்ந்தால், நாடாளுமன்ற கொள்கை அடிப்படையிலான ஜனநாயகம் சாத்தியமா?, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம்” என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.
மேலும், “ஆளுநர் ஒருவர் சட்ட மசோதாக்களைக் கிடப்பில் போடுவதற்குத் தகுதியற்றவர். இந்த விவகாரத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். அவரது நடவடிக்கை, ஜனநாயகத்தின் அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்குவதாகும்” என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.
பின்னர் இந்த வழக்கு, அடுத்த மாதம் விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.