பிரேசிலிய இன்ஃப்ளூயன்சர் லுவானா ஆண்ட்ரேட் (29) கால் முட்டியில் உள்ள கொழுப்பைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கால் முட்டியில் உள்ள கொழுப்பைக் குறைக்க “லிபோசக்ஷன்” என்ற அறுவை சிகிச்சையை லுவானா மேற்கொண்டார். அறுவை சிகிச்சை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவருக்கு அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டது.
லுவானாவின் இதயத்தை மீண்டும் செயல்பட வைக்க மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால், 4 முறை மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. லுவானாவின் மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் குறித்து மருத்துவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம், அறுவை சிகிச்சைகளின் ஆபத்துகளை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளது. அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்பு, மருத்துவரிடம் முழுமையான ஆலோசனை பெறுவது அவசியம்.