இதன் செய்முறை, வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில், ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி வடகிழக்கு மூலையில் வைக்கவும். பின்னர் கட்டைவிரல் மற்றும் சுண்டு விரலைப் பயன்படுத்தி, ஒரு வெள்ளை மொச்சையைத் தண்ணீரில் போடவும். இதேபோல் 7 நாட்களுக்குச் செய்யவும். இதையடுத்து, அடுத்த வரும் வெள்ளிக்கிழமையில், இந்த நீரைத் துளசிச் செடிக்கு ஊற்றவும். பின்னர். மொச்சையைப் பறவைகளுக்கு தானம் செய்ய வேண்டும். மேலும், இந்த பரிகாரத்தில் மகாலட்சுமியின் அருள் முழுமையாகக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
அதேசமயம், இந்த பரிகாரம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை, பரிகாரம் செய்யும் போது, தூய்மையான மனதுடன் இருக்க வேண்டும், மகாலட்சுமியை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும், பிறருக்கு உதவுவது போன்ற நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.