இந்தியாவில் தற்போது 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்குச் செல்லும் அணியைக் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
அதில், அவர் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குச் செல்லும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டும் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணிகள். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இரண்டும் கடந்த சில ஆண்டுகளாகச் சிறப்பாக விளையாடி வருகின்றன, மேலும் அவை இரண்டும் உலகக் கோப்பை வெற்றி பெற வாய்ப்புள்ளது” என்றார்.
அதேசமயம், அவர் ” இந்த நான்கு அணிகளும் தங்கள் சிறந்த விளையாட்டை விளையாடினால், அவை அரையிறுதிக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளது. இருப்பினும், கிரிக்கெட் என்பது ஒரு எதிர்பாராத விளையாட்டு, எனவே எந்த அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளது”எனவும் கூறினார்.