தயிர் முகத்தில் உள்ள கருமையைப் போக்கச் சிறந்த தீர்வாகும். தயிரில் உள்ள லேக்டிக் அமிலம் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும், தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
ஆகவே, உங்கள் முகத்தில் உள்ள கருமையைப் போக்கத் தயிர் பயன்படுத்தும் முறை, தினம் குளிக்கும் முன் ஒரு ஸ்பூன் தயிரை முகத்தில் தடவவும். முகம் முழுவதும் தயிரைத் தடவி, 20 நிமிடம் ஊற வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். இந்த முறையைத் தினம் ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கும். மேலும், முகம் பளிச்சென்று காணப்படும்.
தயிருடன் வேறு சில பொருட்களைச் சேர்த்தும் முகத்தில் உள்ள கருமையை போக்கலாம். அதன்படி, இந்த தயிருடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவாகும். அதைப்போல், தயிர் மற்றும் பாலை சம அளவு சேர்த்து முகத்தில் தடவினால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
மேலும், நீங்கள் தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்த்து முகத்தில் தடவினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் மென்மையாகும்.இந்த பொருட்களைப் பயன்படுத்தும் போது, சருமம் எரிச்சல் அடையாமல் இருப்பதற்காக, 10 நிமிடங்களுக்கு மேல் ஊற வைக்க வேண்டாம்.