- Advertisement -
திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை இன்று (செப் .20) பிடிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாகத் திருப்பதிக்குப் பாத யாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு, சிறுத்தை பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அதனால், சிறுத்தைகளைப் பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், ஏற்கனவே 5 சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில், தற்போது வனத்துறையால் பிடிக்கப்பட்டது 6வது சிறுத்தையாகும். அதனை வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்குக் கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
- Advertisement -