- Advertisement -
பிகார் மாநிலம், தும்ரா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் நேற்று (செப். 12) மதிய உணவு சாப்பிட்ட சுமார் 50 மாணவர்களுக்கு திடீரென வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டு மயக்கமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், ” தற்போது மாணவர்கள் உடல்நிலை சீராக உள்ளது. மதிய உணவில் பல்லி கிடந்ததால் மயக்கம் ஏற்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- Advertisement -