- Advertisement -
கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது காங்கிரஸ் அரசு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளைக் கூறியது. அதில், முக்கியமாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த தேர்தலில் வெற்றி தற்போது ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் அரசு ஒவ்வொரு வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும், ‘கிரகலட்சுமி’ திட்டத்தை வருகின்ற ஆகஸ்ட் 30ம் தேதி மைசூருவில் தொடங்கி வைக்கிறார் வயநாடு எம்.பி. ராகுல்காந்தி. மேலும், இத்திட்டத்தின் மூலம் சுமார் 1.30 கோடி பெண்கள் பயன் பெறவுள்ளனர் எனத் தகவல் வந்துள்ளது
- Advertisement -