- Advertisement -
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் இன்று (ஆக.11) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசி அவர், “நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நேற்று இரண்டரை மணி நேரம் (2.13) நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மணிப்பூர் குறித்து வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே பேசினார். பல மாதங்களாக மணிப்பூர் பற்றி எரியும் நிலையில் மோடி நகைச்சுவையாகப் பேசி சிரிக்கிறார்” எனக் குற்றம் சாட்டினார்.
மேலும், அவர் ” “மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேசியது இந்தியத் தாயைக் கொன்றதற்குச் சமம். மணிப்பூரில் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்து பிரதமர் மோடி சிரிப்பது வெட்கக் கேடானது. பிரதமர் மோடி கட்டாயம் மணிப்பூர் செல்ல வேண்டும்” எனத் தனது கண்டனத்தைத் தெரிவித்தார்
- Advertisement -