- Advertisement -
நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தீவிரப்படுத்தியுள்ளது. இது வருகின்ற 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் சாத்தியமாகும் என்கிறது. மேலும், இதற்காக ஒரு பெண் உட்பட 4 விண்வெளி வீரர்கள் சில மாதங்களாகவே பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் தங்களை விண்ணுக்கு அழைத்துச் செல்லும் ‘ஒரியன் விண்கலத்தை’ நேரில் சென்று பார்வையிட்டனர். இது வீரர்களுக்கு உற்சாகத்தைத் தரும் என்பதால் நேரில் பார்வையிட அனுமதித்ததாக நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது
- Advertisement -