- Advertisement -
கேரள மாநிலத்தில் உள்ள அட்டப்பாடி வனப்பகுதியில் வழக்கம் போல் வந்த காரை திடீரென காட்டு யானை வழிமறித்து தனது தந்தத்தால் 3 முறை குத்தித் தாக்கியது. இதனால், காருக்குள் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டதால் தனது தாக்குதலை நிறுத்தி யானை காட்டுக்குள் சென்றது. இதுகுறித்து தஃவாலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவலர்கள் அந்த யானையால் யாருக்கும் காயம் இல்லை எனக் கூறினர்.
மேலும், இரவு நேரத்தில் யானைகள் நடமாடுவதால் இந்த பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் எச்சரிக்கையாகச் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்
- Advertisement -