கடந்த 2 மாதத்திற்கும் மேல் மணிப்பூரில் நடந்து கலவரத்தில் 200கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர், அண்மையில் இணையத்தில் வெளியான 2 குக்கி இன பெண்களின் நிர்வாண காணொளி ஆகியவற்றை மூலம் நாடே கொதித்தெழுந்தது. இந்த மணிப்பூர் வன்முறை குறித்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்
இந்நிலையில், மணிப்பூர் வன்முறை வழக்கு விசாரணையில் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வியெழுப்பினார். அதில், அவர் “விசாரணை மந்தமாக நடக்கிறது, வழக்குப்பதிவு செய்வதில் காலதாமதம், கைது இல்லை, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை; கடந்த 2 மாதங்களாக FIR கூட போட முடியாத, மோசமான சூழல் அங்கு இருந்துள்ளது; அரசு இயந்திரம் முற்றிலும் பழுதடைந்துள்ளது” என தனது காட்டத்தை தெரிவித்துள்ளார்