- Advertisement -
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவ்வப்போது மக்களை பேருந்துகளில், கடைகளில், உணவங்களில் போன்ற இடங்களில் சந்தித்து வருகிறார். அந்த வகையில், டெல்லியில் உள்ள அசாத்பூரில் உள்ள காய்கறி சந்தைக்கு இன்று(ஆக. 01) திடீரென்று நேரடியாக சென்று அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார்.
அப்படி, மக்களோடு மக்களாக வலம் வந்த ராகுல் காந்தி அவர்கள், காய்கறி, பழங்களின் விலை குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும், இந்த காய்கறி உயர்வு, அதனால் ஏற்படும் பாதிப்பு பற்றி அறியும் நோக்கில் சந்தைக்கு அவர் வருகை தந்தார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளனர்.
- Advertisement -