மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா என்ற கருத்தை மணிப்பூரிலிருந்து மீண்டும் உருவாக்குவோம். எங்களை எப்படி வேண்டுமானாலும் அழையுங்கள், நாங்கள் I.N.D.I.A” என்றார்.
மேலும், அவர் ” மணிப்பூரில் உள்ள ஒவ்வொரு பெண் மற்றும் குழந்தையின் கண்ணீரைத் துடைக்கவும், மாநிலத்தை மீட்டெடுக்கவும் நாங்கள் உதவுவோம். மக்கள் அனைவரிடையே அன்பையும் அமைதியையும் மீண்டும் திரும்பக் கொண்டு வருவோம்” என ட்வீட் செய்துள்ளார்
- Advertisement -