கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி பெயர் குறித்து கடும் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், இந்த விமர்சனம் குறித்து ராகுல் காந்தி மீது குஜராத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம் ராகு;ல் காந்திக்கு 2ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது
ஆனால், இதை எதிர்த்து ராகுல் காந்தி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்குத் தடை கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று (ஜூலை 21) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதில், ராகுலுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்குத் தடை விதிக்கப்பட்டால், அவர் மீண்டும் எம்பி பதவியைப் பெற முடியும். எனவே, இந்த தீர்ப்பின் மீது காங்கிரசார் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- Advertisement -