எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் ராகுல் காந்தி அவர்கள், “இந்த போராட்டம் 2 அரசியல் கட்சிகளுக்கு இடையேயான யுத்தம் அல்ல, இந்தியாவின் சித்தாந்தத்தைப் பாதுகாக்கும் போராட்டம். இதுவரை வரலாற்றில், இந்தியாவின் கருத்தை யாராலும் எதிர்த்துப் போராட முடிந்ததில்லை என்பதை நாம் அறியலாம், இது இந்தியாவின் சித்தாந்தத்திற்கும் மோடிக்கும் இடையிலான யுத்தம்” என்றார்.
மேலும், அவர் ” நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் கொள்கைக்கு எதிரான போராட்டம். நாட்டின் மகத்தான கொள்கையை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். INDIA என்ற இந்த கூட்டணியின் பெயர், இந்தியாவின் கருத்தைப் பாதுகாப்பதற்கான எங்களின் உறுதியைக் குறிக்கிறது” எனப் பேசினார்
- Advertisement -